
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
உருத்திராட்சமும்! மருத்துவமும்!
உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப் பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன. மிகவும் அரிதான சில தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து பகிர்ந்திருக்கிறேன்.
உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.
ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்
இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.
மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.
நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.
ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.
ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்
பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.
பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.
நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.
உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.
ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்
இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.
மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.
நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.
ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.
ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்
பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.
பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.
நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.
உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!
நம் உடலில் அணிந்து கொள்வதற்கு, பிரார்த்தனைகள் அல்லது மந்திரங்களை செபிக்கும் போது ஜபமாலையாக பாவிக்க, இறைவனின் திருமார்பில் ஆபரணமாய் சூடுவதற்கு என மூன்று விதமான பயன் பாட்டிற்கென உருத்திராட்ச மாலைகள் உருவாக்கப் படுகின்றன. ஒரே முகமுடைய மணிகளால் மட்டுமே இந்த மாலைகள் அமைக்கப் பட வேண்டும். பெரும்பாலான உருத்திராட்ச மணிகளின் நடுவில் இயற்கையாகவே துளையிருக்கும். அப்படி துளைகள் இல்லாத காய்களில் மட்டுமே துளைகளை இடுகின்றனர். இந்த தகவல் அநேக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும்.
அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையே உருத்திராட்ச மணியை வைத்தால் அவை சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும் தன்மையுடையதாம். இது போல வேறு சில முறைகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு உருத்திராட்ச மணியும் தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப் படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன். இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய் கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும் இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளியாது ஒரு மணி மற்றொரு மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது. பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.
இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி, பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன. மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக மணி” அல்லது “மேரு மணி” என அழைக்கின்றனர்.
இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம் கூடுதல் பலனை தருகிறது. காலை வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே சரியான பலனை அடைந்திட முடியும். மேலும் உருத்திராட்ச மணியால் ஆன செபமாலையை வைத்துக் கொண்டு மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள், ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்
ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும்.
அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையே உருத்திராட்ச மணியை வைத்தால் அவை சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும் தன்மையுடையதாம். இது போல வேறு சில முறைகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு உருத்திராட்ச மணியும் தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப் படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன். இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய் கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும் இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளியாது ஒரு மணி மற்றொரு மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது. பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.
இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி, பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன. மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக மணி” அல்லது “மேரு மணி” என அழைக்கின்றனர்.
இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம் கூடுதல் பலனை தருகிறது. காலை வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே சரியான பலனை அடைந்திட முடியும். மேலும் உருத்திராட்ச மணியால் ஆன செபமாலையை வைத்துக் கொண்டு மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள், ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)