சனி, 11 ஏப்ரல், 2009

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்

வஜ்ர நாகாய வித்மஹே; தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:
ஸ்ரீ ஈச்வர உவாச:-
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்! நிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸ¤தம்! நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்! புஜ ஓம்ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்! ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா! யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்!
நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மன:! மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:! ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்!!
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே! ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!! ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணான்விதம்! பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்! த்யக்தது: கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மான: பரமாத்மன:! அதோஹமபி தே தாஸ: இதிமத்வா நமாம்யஹம்!!
சமங்கரேணா தராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்! த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
**********
மஹா நாராயண உபநிஷத்: அகோர மந்த்ரம்:
அகோரேப்ப்மோஸத கோரேப்ப்யோ கோர கோர தரேப்ப்ய : சர்வேப்ப்யஸ்
சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ப்ய:
இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.

வீரத்துறவி

ஜனவரி 12. 1863-ம் ண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?
 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.
 யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.
 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். கவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.
 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். கவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.
 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. னால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
 துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். கவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.
 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

ஆவியுலக அனுபவங்கள்

எனக்கு ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல வழக்கம் இருந்தது. 'வேப்பமர உச்சியில் நின்னு... பேயண்ணு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!' என்று அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான 'தூங்காதே... தம்பி தூங்காதே...' மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை எடுத்துக் கொண்டோம். எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம். அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும் ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை வளத்தில் 'லார்ட் ஆ·ப் திரிங்ஸை'யும், கதை வளத்தில் 'ஹாரி பாட்டரை'யும், கவர்ச்சி வளத்தில் 'பேசிக் இன்ஸ்டிங்க்ட்'டையும் மிஞ்சும் படங்கள் மூலம் நட்புகரமான பேய்களின் அறிமுகம். அப்படியே 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்று பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப் பேந்த விழிக்கும் மோகனின் 'பிள்ளை நிலா' அப்பொழுது வெளிவந்தது. கல்யாணமானால் வீட்டில் 'பேய்' இருக்கும் என்று சிலர் சொல்லித் தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை. நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி உலாவி வந்தது. 'அட்மிரால்டி ஹோட்டல்' என்னும் விடுதியின் வாயிலில் உள்ள மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால் விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன் விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர் சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட் தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில் சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள். மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று. அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான். நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன் எங்களை உற்று பார்ப்பதும் 'என்ன வேணும்டா' என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக் கொண்டிருந்தான். ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின் கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம் சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம். இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great story-teller or a master decptionist. வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள். முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம் நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம். சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர் கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள் சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும் விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன். என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது. உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக் கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும் அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ் என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம் கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த 'Defending Your Life' படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக் கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது. அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும் விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர் முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன். (சோகத்தைத் தீர்க்க 'ஜான்' டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை கொடுக்க வந்தது தனி கதை). சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன் தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது. ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம் அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான் மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள். நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, 'ஆவிகளுடன் பேசுவதற்கான போர்டு' என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. 'Please grow up' என்று மனைவி சொல்ல தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

கல்லறைப் பாடம்

மற்றுமொரு நவம்பர் தினம். இதாகாவில் அக்டோபரிலேயே பனி கொட்டத் துவங்கி விடும். பனி என்றால் தமிழகத்தில் மார்கழி மாதத்தில் இரவில் குளிரும்போது பனி கொட்டுகிறது என்போமே, அந்த மாதிரியில்லை. உறைபனி. வெள்ளை வெளேரென்று உடைந்த ஐஸ் கட்டித்தூள் மேலிருந்து கொட்டும். கொட்டிய பனி குவிந்து தெருவில், தெருவோர நடைமேடையில், புல்வெளியில் என்று எங்கும் படர்ந்து வெள்ளைத்தோல் போர்த்தி எது தெரு, எது நடைமேடை என்று தெரியாமல் இருக்கும். மேலுள்ள ஐஸ் தூளுக்கடியில் கெட்டியாகிப் போன ஐஸ், கண்ணாடி போல் "ஸ்லீட்" என்று சொல்லக்கூடிய வழுக்கும் தரையாக இருக்கும். விவரம் தெரியாமல் காலை வைத்தால் தலை குப்புற விழ வேண்டியதுதான். வீசும் காற்றோடு நடுக்கும் குளிரோ பூஜ்யத்திற்குக் கீழே இருக்கும்.இதில் புகுந்து புறப்பட வேண்டுமென்றால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடை, அணிகலன்கள் தேவை. முதலில் சாதாரண உள்ளாடைகள். அதன் மேல் வெப்ப உள்ளாடைகளை மேலுக்கும், கீழுக்கும் அணிய வேண்டும். இவை உடல் வெப்பத்தை முடிந்தவரை தேக்கி வைத்திருக்கும். பின்னர் எப்பொழுதும் அணியும் மேல்சட்டையும், கால்சராயும். அதன் மேல் கம்பளி அல்லது சின்தெடிக் ஸ்வெட்டர். அதன் மேல் 'டௌன் ஜாக்கெட்'. இந்த டௌன் ஜாக்கெட்டில் தைத்த சின்தெடிக் உறைகளில் வாத்துகளின் இறக்கைகள் நிரப்பப் பட்டிருக்கும். இயற்கையில் குளிரைக் காக்க உதவும் பொருள் செயற்கையாக மனிதனின் உதவிக்கு வருகிறது. காலில் கம்பளிக் காலுறை அணிந்து, அதன் மேல் சாதாரண பருத்திக் காலுறை அணிந்து அதன்மேல் வழுக்கி விழாத 'கிரிப்' உடைய நீண்ட ஷூ ஒன்றை அணிய வேண்டும். ஸ்லீட்டாக இருந்தாலும் ஒரேயடியாக வழுக்கி விடாமல் ஓரளவுக்கு சமாளித்து விடலாம். பனித்தூளும் காலுக்குள்ளே புகுந்து தொல்லை செய்யாது. கைகளில் தடித்த உறை அதன்பின். தலைக்குக் கம்பளியால் ஆன 'குரங்குத்தொப்பி'. அதன்மேல் டௌன் ஜாக்கெட்டின் முக்காடை எடுத்துப்போட்டுக் கொள்ள வேண்டும்.இவையனைத்தையும் போட்டுக் கொள்ளவே கிட்டத்தட்ட பத்து நிமிடம் பிடிக்கும். உறையிட்ட கைகளை டௌன் ஜாக்கெட்டின் பைகளுக்குள் விட்டுக் கொண்டு, பனிக்கரடி பனிமலைகளில் நடப்பது போல மெதுவாக உதிர்பனித் தரையில் நடக்க வேண்டும்.இவ்வளவுக்குப் பின்னும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மூக்கு மரத்துப் போய் வலிக்கும்.இப்படிப்பட்ட அந்தக் காலை நேரத்தில் என் எடையில் 10 கிலோ கூடுதலாக பனிக்கு பயந்து ஆடை அணிந்து பல்கலைக் கழகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. சம்மர்ஹில் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து எல்லிஸ் ஹாலோ ரோட் வழியாகத் தியரி செண்டர் செல்ல வேண்டும். சாலை ஒரு கல்லைறை வளாகத்தைச் சுற்றிக் கொண்டு போகும். மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். கல்லறையின் நடுவே நடந்து போவதானால் ஒரு கிலோமீட்டர் குறையும்.எனக்கு சாவின் மேல் எப்பொழுதுமே பயம். சின்ன வயதிலிருந்தே எந்த சாவுக்கும் நான் போனதில்லை. என் தாத்தா, பாட்டி இறந்த போதும் பிறர் கண்காணிப்பில் விடப்பட்டு சாவை விட்டு விலகியே இருந்திருக்கிறேன். சாவு என்பது தீட்டு. விலகி இருக்க வேண்டும். சாவு என்பது அமானுஷ்யம். புரியாதது. புதிரானது. பயமூட்டக் கூடியது. உடல் எரிக்கப்படுகிறது, உடல் சிதைகிறது. எலும்புகள் சேகரிக்கப்படுகிறது. சாம்பல் தனியாக சேகரிக்கப்படுகிறது. உயிருடன் இருந்தவர் திடீரென்று சாம்பலாகவும், எலும்பாகவும், மிச்சம் மீதி சடங்குகளுக்காக வெளியே உலவும் ஆன்மாவாகவும் மாறுவது மனதில் பீதியைக் கிளப்புவது. அந்த ஆன்மா சொர்கத்துக்குப் போகப் போகிறதா, இல்லை நரகத்துக்குப் போய்த் திண்டாடப் போகிறதா என்பது தெரியாமலேயே, நன்மையே நடக்கும் என்று சடங்குகள் செய்யப்படுகின்றன. சடங்குகள் செய்ய வருபவரிடம் பேரம் பேசும்போதும் பயமே ஏற்படுகின்றது. இவர் பத்து ரூபாய் குறைந்து விட்டது என்று நம்மிடம் கோபம் கொண்டு மந்திரத்தைத் தவறாகச் சொல்லி நரகத்துக்கு அனுப்பி விடுவாரோ என்று திகில்.எக்ஸார்சிஸ்ட், ஓமன் போன்ற ஆங்கிலப் படங்களில் கெட்ட ஆவிகள் கல்லறையில்தான் சுற்றும். திடீரென்று எழுந்திருந்து ஊருக்குள் வந்து நாசத்தை உண்டு பண்ணும். இரத்தம், கோரச் சாவு, பழி வாங்கல், பீதி, ஓட்டம், கலக்கம், கவலை என்று ஏன் இந்த அமானுஷ்யங்கள், பிறர் வாழ்க்கையைச் சின்னாபின்னப் படுத்தி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஆங்கிலப் படங்களில்தான் என்றல்ல, இந்தியக் கதைகளிலும், கடவுள் வழிபாட்டு சுலோகங்களிலும்தான் பேய்கள், கொள்ளிவாய்ப் பிசாசுகள், புழக்கடை முனிகள், பிள்ளையைத் தின்னும் பிரம்ம ராட்சதர்கள், பில்லி, சூனியம் என்று அமானுஷ்யத்தை வைத்து எத்தனை எத்தனை?இதெல்லாம் வெறும் பொய்யா? காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தவைகளை மீறிப் பகுத்தறிவு திடீரென்று வந்து விடுமா? நான் எப்பொழுதும் அந்தக் கல்லறையை ஒட்டி, ஆனால் வெளியிலேயே நடப்பேன். கல்லறைக்கு நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கிடையாது. நெருக்கி எழுப்பப்பட்ட பைன் மரங்கள்தான் வேலி. சில இடங்களில் குட்டைச் சுவர் எழுப்பப் பட்டிருக்கும். கல்லறையில் உள்ளே தார்ச் சாலைகள் ஓடும். இரண்டு இடங்களில் பெரிய கம்பிக் கதவுகள் இருக்கும். உள்ளே போக ஒன்று, வெளியே வர மற்றொன்று. எப்பொழுதும் இந்தக் கதவுகள் பூட்டியே இருக்கும். ஏதேனும் சவ அடக்கம் நடைபெறும்போது மட்டும் இந்தக் கதவுகள் திறந்துவிடப்பட்டு, கார்கள் மற்றும் சவ வண்டிகள் உள்ளே வந்து போகும். இந்தக் கதவுகளைத் தவிர இரண்டு சிறு சுழல் கம்பி கேட்டுகள் உண்டு. இதில் மனிதர்கள் புகுந்து வெளி வரலாம். கல்லறை முழுவதும் புதைக்கும் இடங்களெல்லாம் புல் தரைகள். பல மரங்கள் நடப்பட்டு, வேனில் காலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும்போதும், இலைகள் உதிர்ந்து மொட்டை மரங்கள் பனிக்காலத்தை எதிர்நோக்கும் போதும், பனி கொட்டி கல்லறை முழுதும் வெள்ளையுடையில் காட்சியளிக்கும்போதும், மழைத் துளிகள் விடாமல் சொறியும்போதும் அந்தக் கல்லறை எப்பொழுதும், எல்லாக் காலங்களிலும் அமைதியாக, ஆனால் எனக்குள் உள்ளூர பயத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு கம்பீரத்துடன் இருக்கும்.ஒரு சில சவ அடக்கங்களை வெளியே போகும்போது பார்த்திருக்கிறேன். நின்று கவனிக்கவோ அல்லது உள்ளே போய்ப் பார்க்கவோ இதுவரை தைரியம் இருந்ததில்லை. ஐந்திலிருந்து பத்து பேர்தான் வந்திருப்பர். சவ வண்டி தனியாகத் தெரியும். அதிலிருக்கும் சவப்பெட்டி செத்தவரின் செல்வத்தைப் பொறுத்து அலங்காரத்துடனோ அல்லது சாதாரணமாகவோ இருக்கும். அதற்குமேல் பார்க்காமல் வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து போய்விடுவேன்.அன்று காலை எனக்குள் என்னவோ தோன்றியது. இத்தனை குளிரில் ஆவிகள் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் என்ற நம்பிக்கையோ? இந்த வழுக்கும் தரையில், கனக்கும் உடையில் ஒரு கிலோமீட்டரைக் குறைத்து விடலாம் என்ற எண்ணமோ? சிறிது தயங்கினேன். பின்னர் சுழலும் கம்பி கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நடக்கத் தொடங்கினேன். உள்ளே செல்லும் சாலையை அப்படியே தொடர்வதுதான் சரி என்று தோன்றியது. சாலையை விட்டு விலகி நடந்தால் ஏதேனும் ஒருவரது சவப்பெட்டியைப் புதைத்ததன் மேல் கால்வைக்க வேண்டிவரும். அது அவரையும், அவரது உறவினரையும் அவமதித்ததாகலாம். தூங்கிக் கொண்டிருக்கும் ஆவிகள் எதனையும் ஏன் வீணாக உசுப்பி விட வேண்டும்? சாலை வளைந்து நெளிந்து, மேலும் கீழுமாக எழும்பியும் இறங்கியும் சென்றது. அப்பொழுதுதான் நான் அந்த வயதானவரைப் பார்த்தேன்.நான்கு சலவைக்கல் பதித்த உறங்கும் சவங்களிடத்தில் இருக்கும் ஒரு கான்கிரீட் பெஞ்சில் அவர் உட்கார்ந்திருந்தார். கிட்டத்தட்ட 70 வயதிருக்கலாம். கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்தார். அதன் மேல் கறுப்பு நிறத்தில் ஒரு ஓவர்கோட் போட்டு பட்டன்களைப் போடாதிருந்தார். தலையில் பழுப்பு நிறத் தொப்பி அணிந்திருந்தார். அதில் பனி பெய்திருந்தது. ஓவர்கோட்டில் பனித்துளிகளும், உருகி வழியும் நீரும்."ஹல்லோ, இளைஞனே!""நற்காலையாகுக!" என்று சொல்லிவிட்டு சிறிது தயங்கியவாறே அவர் முன் நின்றேன்."இங்கு வந்து உட்காரு என்னருகே!"சென்று அவர் அருகே அமர்ந்தேன். சிறிது நேரம் நாங்கள் இருவரும் பேசவில்லை. எத்தனை நேரம் ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் அலுவலகத்திற்கு நான் உடனடியாகப் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. நான்கு வருடமாகச் செய்துகொண்டிருக்கும் பிஎச்டி ஒரு பனி கொட்டும் நாளில் முடிந்து விடப் போவதில்லை."இன்றுதான் என் மகன் இறந்த நாள். இன்றோடு இரண்டு வருடங்கள்.""ஓ, மிகவும் வருந்துகிறேன்.""அதோ, அதுதான் என் மகன். பக்கத்தில் அவனது மனைவி, அதற்குப் பக்கத்தில் அவர்களது சிறு மகள், இந்தப் பக்கம் என் மனைவி. அதற்கடுத்த இடம் எனக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்."எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முழுக் குடும்பமும் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென்று அவர் முடிவெடுத்து அந்த இடத்தை முன்பதிவு செய்து வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சினிமா தியேட்டரில் இருக்கைகளை ஆக்ரமிப்பது போல் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். இந்தக் கிழவரும் தன்நாள் என்று வருமோ என்று தனக்குரிய இடத்தின் அருகிலேயே உட்கார்த்திருப்பவர் போலத் தோன்றியது.என் முகத்தைப் பார்த்தது, "ஏன் உன் முகத்தில் பயம்?" என்றார்."அய்யா, இதுதான் நான் கல்லறை ஒன்றின் வழியே வருவது முதல் தடவை.""அதற்கா பயம்? இங்கிருப்பது என் குடும்பத்தவர்கள், அது போன்ற மற்ற மனிதர்கள். இன்னும் சில நாட்கள் கழித்து நானும் இங்குதான் புதைக்கப்படுவேன்."நான் ஒன்றும் சொல்லவில்லை."உங்கள் நாட்டில் இறந்தவர்களை என்ன செய்வீர்கள்?""எங்கள் குடும்பங்களில் எரித்து விடுவோம். எங்கள் நாட்டில் சிலர் புதைக்கவும் செய்வார்கள்.""மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் மண்ணுக்குள்ளேயே போகட்டும் என்பது எங்கள் மதம். நாங்கள் உயிரற்ற உடலை எரித்துச் சிதைக்க மாட்டோம். நான் ஒரு தீவிர கிறித்துவன் அல்லன். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அந்த உயிர் இருந்தவரை எவ்வளவு புனிதம் அந்த உடலுக்கு உண்டோ, அந்தப் புனிதம் உயிர் போன பின்னும் தொடரும். எனது உறவு இங்கு பெட்டிகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட உடல்களோடும் தொடர்கிறது. இவர்களிடத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. இங்குள்ள உயிர் நீத்த எவரிடமும் எனக்கு பயம் இல்லை. உனக்கும் பயம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை."நாங்கள் இருவரும் கனத்த மௌனத்தோடு அங்கே உட்கார்ந்திருந்தோம். மதியம் ஆகியிருக்கும். கொஞ்சமாக வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. குளிர் ஒன்றும் குறையவில்லை, வெளிச்சம் மட்டும்தான். அந்தப் பெரியவர் எழுந்திருந்தார்."எனக்கு இன்று மதியம் வகுப்பு ஒன்று எடுக்க வேண்டும். நீ எந்தத் துறையில் படிக்கிறாய்?""நான் இயந்திரப் பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறேன்.""அப்படியா, நான் இருப்பது வேதியியல் துறையில். ஆராய்ச்சியெல்லாம் சின்ன வயதுக்காரர்களுக்கு. நான் இப்பொழுது நேரத்தைச் செலவு செய்வதெல்லாம் துவக்க நிலை மாணவர்களுடன்.""உங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா பேராசிரியரே?"சொன்னார். சொல்லி விட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார். மெதுவாக என் பார்வையிலிருந்து மறைந்தார். எனக்கு முதலில் அவரது பெயர் விளங்கவில்லை. பிறகுதான் மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. இவருக்கு ____ வருடத்தில் வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்ததல்லவா?அன்று முதல் அங்கிருந்த மற்றும் இரண்டு வருடங்களிலும் நான் அந்தக் கல்லறை வழியாகத்தான் நடக்கத் தொடங்கினேன். அங்கு புதைக்கப்பட்ட அனைவரும் எனக்கு நண்பர்களாகவே இருந்தனர்.

அமானுஷ்யம்’ பகுப்புக்கான தொகுப்பு

Out of body experince
முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.
சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????
உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?… ஒரு வேளை வெறும் கனவா?
முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.
அவை1. தூல உடல் (அன்னமய கோசம்)2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)3. சூட்சும உடல் (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.
தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.
பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.
காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஔரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.
ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.
மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.
விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில் மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஔர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது.
ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும் துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.
பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஔட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.
Out of body experince பற்றிய ஒருவரின் அனுபவம்…
”நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன். அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும். பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.”

வெள்ளி, 30 ஜனவரி, 2009

சிறப்பிதழ்கள்

http://www.adhikaalai.com/
http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com/
http://www.thiratti.com/
http://blogintamil.blogspot.com/
http://www.maatru.net/
http://gilli.in/
http://kathambamaalai.wordpress.com/
http://satrumun.com/
http://thatstamil.oneindia.in/
http://www.dinamalar.com/
http://www.bbc.co.uk/tamil/
http://msn.webdunia.com/tamil/index.தடம்
http://in.tamil.yahoo.com/
http://www.tamiloviam.com/unicode/main.ஆசப்
http://www.maraththadi.com/
http://www.nilacharal.com/
http://www.thozhi.com/
http://www.mazhalaigal.com/
http://tamilbookmarket.com/
http://tamil.kanimai.com/
http://www.nilacharal.com/

http://www.sanimoolai.blogspot.com/

http://tamil.kanimai.com/

http://www.vadakkuvaasal.com/

http://www.viruba.com/

http://www.keetru.com/

http://www.keetru.com/visai/index.ப்ப்

http://pm.tamil.net/akaram_uni.ஹ்த்ம்ல்

http://projectmadurai.tamil.net/1

http://www.sarav.net/

http://www.andhimazhai.com/

http://pamaran.wordpress.com/

http://charuonline.com/

http://jannal.blogspot.com/

http://jeyamohan.in/

http://www.sudhanganin.blogspot.com/

http://www.writerpara.net/

http://sramakrishnan.com/

http://eramurukan.in/

http://blog.tamilsasi.com/

http://mugunth.tamilblogs.com/

http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.ஹ்த்ம்ல்

http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.ஹ்த்ம்ல்

http://pkp.blogspot.com/

செவ்வாய், 27 ஜனவரி, 2009

பதினெட்டு சித்தர்கள் கோவில்


சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோதிருமூலர் - சிதம்பரம்இராமதேவர் - அழகர்மலைஅகஸ்தியர் - திருவனந்தபுரம்கொங்கணர் - திருப்பதிகமலமுனி - திருவாரூர்சட்டமுனி - திருவரங்கம்கரூவூரார் - கரூர்சுந்தரனார் - மதுரைவான்மீகர் - எட்டிக்குடிநந்திதேவர் - காசிபாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்போகர் - பழனிமச்சமுனி - திருப்பரங்குன்றம்பதஞ்சலி - இராமேஸ்வரம்தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்கோரக்கர் - பொய்யூர்குதம்பை சித்தர் - மாயவரம்இடைக்காடர் - திருவண்ணாமலைசக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?``காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம். மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.

வாடிக்கையாளர்கள்

கர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும். அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள். மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.

காலண்டர்

பூமி இரவு பகலாய் மாறி 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் 46 நொடிகளில் சுற்றி நாட்களின் கணக்குகளைக் கொண்டதே காலண்டர் என்கிடறோம். இது விவசாயத்தில் பயிரிட, அறுவடை செய்ய, மழை வருவதையறிய பெரிதும் பயன் படுகிறது மற்றும் தொழில் சம்பந்தங்களிலும் மத விசேஷங்களிலும். அன்றாட வாழ்வியலுக்கும் இன்றியமையாததாகிறது. தற்போது நாம் பயன் படுத்துவது ”கிரிகோரியன்” முறையாகும். இது சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் விகிதத்தை சரி செய்ய 4 வருடத்திற்கு ஒரு நாள் பிப்ரவரி மாதம் 29 நாளாக கணக்கிடப்படுகிறது. இது லிப் வருடமட எனப்படும். (இஸ்லாமிய தேதிகள் சந்திரனை வைத்து கணக்கடப்படுகிறது.)

வியாழன், 15 ஜனவரி, 2009

வியதீபாதம்


மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும். வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு. இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.பொதுவாக ஒவ்வொரு புண்ணிய தினத்தை ஒட்டி ஒவ்வொரு க்ஷேத்திரத்தில் பிரம்மோற்சவம் செய்வார்கள். இவ்விதம் திருவாதிரையை ஒட்டி சிதம்பர க்ஷேத்திரத்திலும், மகா வியதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு ஒரு மைல் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது."கோவில்' என்ற சிறப்புப் பெயர் தில்லைக்கும் திருவரங்கத்துக்கும் மட்டுமே உண்டு. உபநிஷத்துக் களால் உணர்த்தப்பட்ட விராட் புருஷனின் இதய மத்தியில் சிதம்பர க்ஷேத்ரம் அமைந்திருப்பதாக "ஜாபால தர்சனம்' என்ற உபநிஷதம் கூறுகிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கிறது. "சிதம்பர ரகசியம்' என்று போற்றப்படும் இந்த ஆகாயத் தத்துவத்தைப் பற்றி சாந்தோக்கியம், பிருகதாரண்யம், கைவல்யம் போன்ற உபநிடதங் கள் விளக்குகின்றன. உபாசனைகளில் குறிப்பிடப் படும் ஆறு ஆதார ஸ்தானங்களில், மூலாதாரத்தைக் குறிக்கும் தலம் திருவாரூர் என்றும், சுவாதிஷ் டானத்துக்குரிய தலம் திருவானைக்காவல் என்றும், மணிபூரகத்தைக் குறிப்பது திருவண்ணாமலை என்றும், தில்லையம்பதியான சிதம்பரத்தை அனாஹத க்ஷேத்ரமாகவும், விசுத்திக்குரிய தலமாக காளஹஸ்தியும், ஆக்ஞா க்ஷேத்திரமாக முக்தியைத் தரும் காசியும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய பெருமை வாய்ந்த சிதம்பரேசனின் துணைவியான அன்னை சிவகாம சுந்தரியை வாக்கிற்கு அதிதேவதையான "மனோன்மணி' என்ற சக்தி ரூபமாக சாத்திரங்கள் கூறுகின்றன.சிதம்பரத் தலத்திற்கு கனகசபை அல்லது பொன்னம்பலம் என்று பெயர். இதேபோல் ஹாலாஸ்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு ரஜதசபை அல்லது வெள்ளியம்ப லம் என்றும், திருவாலங்காடு தலத்துக்கு ரத்ன சபை என்றும், திருநெல்வேலி ஆலயத்திற்கு தாமிர சபை என்றும், திருக்குற்றாலத்திற்கு சித்ர சபை என்றும் பெயர் வழங்கி வருகிறது. இவையனைத்தும் கூத்தபிரானின் முக்கிய திருத்தலங்களாகும்.இவற்றைத் தவிர, ராமாயண காவியத்தாலேயே போற்றப்பட்ட தலம் "ஆதிசிதம்பரம்' எனப்படும் திருவெண்காடாகும். சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் நடராஜப் பெருமானுக்குத் தனி நடனசபை உண்டு. ஸ்படிகலிங்க பூஜையும், ஆகாயத் தத்துவ ரகசியமும் உள்ளன. ஒப்பற்ற அழகும் சான்னித்தியமும் உள்ள நடராஜரது பாதத்தில், பதினான்கு சதங்கைகளுடைய காப்பு அணிந்துள்ளார். பதினான்கு உலகங்களும் இவரது பாத அசைவினால் அசையும் என்பதை இது காட்டுகிறது. இவரது இடுப்பில் 81 சங்கிலி வளையங்கள் இணைத்த அரைஞாண் அணிந்துள் ளார். இது "ப்ரணவம்' முதலாக "நம' முடிய உள்ள 81 பத மந்திரங்களைக் குறிப்பிடுகிறது. இருபத் தெட்டு எலும்பு மணிகளைக் கொண்ட ஆபரணம் ஒன்றினையும் அணிந்துள்ளார். இது இருபத் தெட்டு சதுர்யுகங்கள் முடிந்துவிட்டதைக் குறிப் பிடுகிறது. இவரது மார்பில் ஒருபுறம் ஆமை ஓடும், ஒருபுறம் பன்றிக் கொம்பும்போல் அமைந்த பதக்கமும் அணிந்துள்ளார். இது "என்பொடு கொம் பொடு ஆமை இவை மார்பிலங்க' என்ற கோளறு பதிகத்தை நினைவூட்டுகிறது. இவரது தலையில் ஷோடச கலைகளைக் குறிக்கும் பதினாறு சடைகள் உள்ளன. மயிற்பீலியும் அணிந்துள்ளார். மீன் போன்ற வடிவத்தில் கங்கையும், பிறைச்சந்திர னும் இவரது சிரசை அலங்கரிக்கின்றன. இறைவ னது நடனத்தை அருகில் நின்று களிக்கும் அன்னை சிவகாமசுந்தரி, "மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவஸாக்ஷினீ' என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரியை நமக்கு நினைவூட்டுகிறாள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த நடராஜப் பெருமானின் பெருமையை விளக்கும் சிதம்பர மஹாத்மியம் என்ற நூல், "இறைவனது கரத்தில் உள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், அபயக் கரம் காத்தலையும், ஒரு கரத்தில் உள்ள அக்னி அழித்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன்மீது வைத்திருக்கும் பாதம் மறைத் தலையும் செய்கிறது. இந்த ஐந்தொழில்களையும் இறைவன் தனது ஸங்கல்ப மாத்திரத்தில் நடத்துவதை இது குறிப்பிடுகிறது' என்று கூறுகிறது.இவ்வாறு ஈசன் திருநடனம் புரியும் திருவாதிரைத் திருநாளில் நாம் அனைவரும் ஆடவல்லானாகிய சிவபிரானைப் போற்றிப் பரவுதல் வேண்டும்.அடுத்து, மார்கழி மாதத்தில் பரமேசுவரனை மகிழ்விக்கும் மகா வியதீபாத விரதத்தின் பெருமையைக் கவனிப்போம். ஸூத ஸம்ஹிதையில் தீர்த்த மாஹாத்மிய காண்டத்தில், "மகா வியதீபாதம் வரும் நாளன்று தற்கால குஜராத்தில் காடியாபாத் என்ற இடத்திலுள்ள ஜோதிர்லிங்கமான சோமநாதரையோ, திருவாரூர் தியாகேசரையோ, ராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாத சுவாமியையோ தரிசித்து வழிபடுதல் மிகச் சிறந்த பலனைத் தரும்' என்று கூறப்பட்டுள்ளது.சைவபூஷணம் என்ற ஆகம நூல், வியதீபாத தினத்தன்று அதிகாலையில் எழுந்து ஆசாரத்துடன் சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறது. இவ்விதம் ஒரு வருடத்தில் வரும் பதின்மூன்று வியதீபாத நாட்களிலும் செய்தால், ஸ்ரீபரமேசுவரன் எல்லாவித நன்மைகளையும் அளிப்பார் என்று கூறுகிறது. இப்பூஜையை மார்கழி மாத மகா வியதீபாதத்தில் தொடங்கி அடுத்த மகா வியதீபாதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வியதீபாதமும் நட்சத்திரங்களைப் போலவே இருபத்தேழு நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.முன்னொரு சமயம், சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மத்தில் அதிக ஈடுபாடுடைய சூரியன் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவ பிரானாவார். தவிர, இந்த மகா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்க ளும் அடங்கும். அதிலும் மகா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

பிரம்மா குமாரிகள்


"பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்' என்னும் ராஜயோக தியான நிலையத்தின் சிறு விதை 1936-ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தி லுள்ள ஹைதராபாத் தில் (கராச்சி) விதைக் கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து, சுமார் 8,500 கிளை நிலையங்க ளைக் கொண்டிருக் கிறது.பிரம்மா குமாரிகள் அமைப்பானது ஓர் ஆன்மிக, சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிபுரிந்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்கால இயந்திரமயமான உலகத்தில், புதிய ஆன்மிக விழிப்புணர்விற்கான பணியைச் செய்து வருகிறது இந்த இயக்கம்.ஆரம்ப கட்டத்தில் சுமார் 350 பேர் கொண்ட ஓர் சிறிய ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற குடும்பமாகச் செயல்பட்டு வந்த இந்த இயக்கம், இன்று பத்து லட்சம் உறுப்பினர் களுடன் விளங்குகிறது. சாதி, சமயம், இனம், மொழி, கலாச்சாரத்தைக் கடந்து, பண்புகள் நிறைந்த வாழ்க்கையின் வாயிலாக உலகத்தில் தூய்மை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பரப்பும் ஆன்மிகப் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வியக்கம் தாதா லேக்ராஜ் என்பவ ரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பிரபல வைர வியாபாரியாக விளங்கினார். சிவ பெருமானின் அருளால் கிடைத்த பல்வேறு தெய்வீகக் காட்சிகளும், ஆன்மிக அனுபவங் களும் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஓர் ஆன்மிகத் தலைவராக உருவெடுத்தார். இவரை மக்கள் "பிரஜா பிதா பிரம்மா' என்று அழைத்தனர். அவர் தனது 60-ஆவது வயதில், 1936-ஆம் ஆண்டு "ஓம் மண்டலி' என்ற ஆன்மிக அமைப்பை நிறுவினார். அதன் பின்னர் "பிரம்மா பாபா' என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். 1950-ஆம் ஆண்டு, 350 பேர் கொண்ட இவரின் ஆன்மி கக் குழு கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து, ராஜஸ்தானில் ஆர வல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள "மவுண்ட் அபு' என்னும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. (இங்குதான் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் இருக்கிறது. இப்போது ஹைதராபாத்திலும் உள்ளது.)பிரஜா பிதா பிரம்மா தீர்க்கமான நம்பிக்கையும், தொலைநோக்குச் சிந்தனை யும் கொண்டவராக இருந்ததால், 1975-ல் ஆரம்பிக்கப்பட்ட அகில உலக சேவையா னது, இன்று ஐந்து கண்டங்களிலுள்ள 130 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆன்மிகம் மற்றும் சமுதாய முன்னேற்றத் தில், தமது தனித்தன்மை வாய்ந்த பண்பு களால் மறுமலர்ச்சி ஏற்படுத்த வல்லவர்கள் பெண்களும் தாய்மார்களுமே என்பதை உணர்ந்து, அவர்களை முன்னிலைப்படுத்தி னார். அதன்படி "மாதேஸ்வரி ஜெகதாம்பா சரஸ்வதி' பிரம்மா குமாரிகளின் முதல் நிர்வாகியானார். அந்த சமயத்தில் இளம் வயதுடையவராக இருந்த போதிலும் ஆன்மிகத் தாயாக விளங்கினார். பாரதத்தின் பல பாகங்களிலும் தனது பணியை மேற்கொண்ட மாதேஸ்வரி, 1964-ஆம் ஆண்டு தனது பூத உடலை நீத்தார். அதன் பின்பு பிரஜா பிதா பிரம்மா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 18-ல் பரிபூரண நிலையைப் பெற்றவராக பூதவுடலை நீத்தார். இவர் களைத் தொடர்ந்து ஆன்மிக சேவையானது மூத்த சகோதரிகளால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தது. அன்பு சொரூபமும், தலைசிறந்த நிர்வாகியுமான "தாதி பிரகாஷ்மணி' தலைமை நிர்வாகியாக 1969-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.இவருடைய ஆர்வம், உற்சாகம், இறைசக்தி, பண்புகளால் ஆன்மிகக் குடும்பத்தைச் செம்மையாக வழிநடத்தினார். அதன் பயனாக 1981 மற்றும் 1986-ல் ஐ.நா. சார்பாக அமைதிப் பதக்கங்கள் வழங்கப்பட் டன. 1987-ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலர், "அமைதித் தூதுவர்' என்ற விருது வழங்கி கௌரவித் தார். இத்துடன் ஐந்து தேசிய "அமைதித் தூதுவர்' விருதுகளை இவ்வித்யாலயத்தின் கிளை நிலையங்க ளான ஆஸ்திரேலியா மற்றும் கென்யா நாட்டு மையங்கள் பெற்றிருக்கின்றன.ராஜஸ்தான், உதயப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக் கழகம், டாக்டர் ஆஃப் லிட்ரேச் சர் (கௌரவ முனைவர்) பட்டத்தை தாதி பிரகாஷ் மணி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தாதி பிரகாஷ்மணி 2007-ஆம் ஆண்டு பூதவுடலைத் துறந்தார். அதன் பின்னர் தாதி ஜானகி அவர்கள் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார். 92 வயது நிரம்பியவராக இருப்பினும், காலத்தையும் உடல் நிலையையும் கடந்து, களைப்பில்லாத சேவையை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வருகிறார். இவருடைய ஆழ்ந்த தியானப் பயிற்சியின் பலனாக, "உலகிலேயே எப்போதும் சமமான மனநிலை கொண்ட பெண்மணி' என்று அறிவியல் ஆராய்ச்சி யின் மூலம் கண்டறியப்பட்டுள்ளார்.பிரம்மா குமாரிகள் வித்யாலயம் பலவிதத்தில் ஒரு ஈடுஇணையற்ற விஷ்வ வித்யாலயமாக உள்ளது. ஆன்மிகப் பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற சிறந்த ஆன்மிகக் கல்வி நிறுவனமாக இது விளங்குகிறது. இதற்குப் பன்னாடுகளின் வரவேற்பும் அங்கீகார மும் உண்டு. ஐ.நா.சபையின் பொதுச் செய்தி இலாகாவில் அரசு சார்பற்ற நிறுவனமாக இணைக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. சபையின் பொருளாதார- சமூகக் கூட்டமைப்பின் (ஊஸ்ரீர்ள்ர்ஸ்ரீ) ஆலோசனைக் குழுவில் ஆலோசகர் அந்தஸ்தில் இடம் பெற்றுள்ளது. கோஸ்டாரிக்காவில் உள்ள ஐ.நா.வின் அமைதிப் பல்கலைக் கழகத்திற்கு, அமைதி பற்றிய கல்வி நுணுக்கத்தின் ஒத்துழைப்பை நல்குவதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதிக் கழகத்தில் (மய்ண்ஸ்ரீங்ச்) ஆலோசகர் அந்தஸ்து பெற்றுள்ளது.மொரீஷியஸ் அரசு, இவ்வித்யாலயத்தை ஒரு பல்கலைக் கழகமாக, பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளது. இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் ஆலோசனை யின் பேரில், கயானா அரசு மூன்று நிமிட ராஜயோக தியானம் செய்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இவ்வித்யாலயம் சமூகத்தின் 18 பிரிவுகளின் அடிப்படையில் தனது பணிகளை அதிகரித்து வருகிறது. அவற்றுள் மருத்துவப் பிரிவு, கல்விப்பிரிவு, மகளிர் பிரிவு, நிர்வாகப் பிரிவு, இளைஞர் பிரிவு, அரசியல் பிரிவு முக்கிய மானவை. தனி மனிதனின் ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் அமைதி, மகிழ்ச்சியின் அடித்தளம் எனவும்; அதுவே உலக மாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், தனிமனித அமைதிக்காக ராஜயோக தியானப் பயிற்சியைக் கற்பித்து வருகிறது. இதைப் பற்றி அறிய வேண்டும் என்று விழைகின்ற ஆண், பெண், குழந்தைகள் யாவரும், ஜாதி, மத, மொழி பேதமின்றி இவ்வமைப்பை அணுகலாம்; அறிந்து பயனடையலாம். இதற் காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் படுவதில்லை.பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான மையங்களில் பல்வேறு பாடமுறைகள், உரையாடல், கருத்தரங்கம் மூலமாக, தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் பட்ண்ய்ந்ண்ய்ஞ்) மூலமாக மனதை எவ்வாறு சீராகப் பராமரித்து ஒருமுகப்படுத்துவது, மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வது (நற்ழ்ங்ள்ள் எழ்ங்ங் கண்ஸ்ண்ய்ஞ்), சுய நிர்வாகத் தலைமை (நங்ப்ச் ஙஹய்ஹஞ்ண்ய்ஞ் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்), முழு ஆரோக்கியத்திற்கான ஆக்கப்பூர்வ அணுகுமுறை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் ஆல்ல்ழ்ர்ஹஸ்ரீட் ற்ர் பர்ற்ஹப் ஐங்ஹப்ற்ட்), நற்பண்புகள் கல்வித் திட்டம் (கண்ஸ்ண்ய்ஞ் யஹப்ன்ங்ள் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்) போன்றவை அவற்றுள் சில.இங்கு கற்றுத் தரப்படும் ராஜயோக தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெற உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைவதற்கான மனோசக்தியும் தன்னம்பிக்கை யும் கிடைக்கிறது. கூடவே தன்னைத்தானே உணரவும் முடிகிறது. எப்பொழுது தன்னைப் புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதுதான் மற்றவர்களை- பிரச்சினைகளை- சூழ்நிலை களைச் சரியாகக் கையாள முடியும்.இந்த ஆன்மிகப் பயணத்தில் உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஈடுபடுத்தும் வண்ணம், அநேக நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்திலும் பிரம்மா குமாரிகள் அமைப் பின் கிளைகள் உள்ளன. அங்கே தினமும் காலை, மாலை இருவேளையும் ராஜயோகப் பயிற்சியும் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. செல்லுங்கள்; ராஜயோகத்தின் மூலம் அமைதி வாழ்வை அடையுங்கள்!

பழங்கள் - சாத்துகுடி


மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.நோயுற்றவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.இரத்த விருத்திக்குசிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.எலும்புகள் வலுவடையசிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.மலச்சிக்கல் தீரமலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.நன்கு பசியைத் தூண்டபசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.குழந்தைகளுக்குஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.பெண்களுக்குநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.முதியோர்களுக்குவயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


தற்போது மழைக்காலம் என்பதால் சாலையின் இரு பக்கங்களிலும், வீடு ஓரங்களிலும் பல செடி கொடிகள் நிறைந்து வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை கொஞ்சம் உற்று கவனித்துப் பாருங்கள். நம் இதழில் நீங்கள் படித்த மூலிகைகளில் சில அங்கு காணப்படும். மூலிகைகளைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அநேக மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கின்றன.சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்குக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.இம்மாத இதழில் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.காச இருமல் கதித்தம சூரியயையம்பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்கற்பூர வள்ளிதனைக் கண்டு(அகத்தியர் குணபாடம்)கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தினநற்பாலர் நோயெலா நாசமா யகலுமே(தேரையர் குணபாடம்)குழந்தைகளுக்குசிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபடஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.சளித் தொல்லை நீங்கமூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.புகை பிடிப்பவரா ....?புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.வியர்வை பெருக்கிசிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.காசநோய்காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது. சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்

அழகிய குறிப்புகள்...


இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒருவித அழகுதான். பூக்கள் அழகு. பசுமை படர்ந்த புற்கள் அழகு, மலை அழகு, மழை அழகு. ஒவ்வொரு உயிருக்கும் தன் குழந்தை அழகு. அதுபோல் மனிதருக்கு அழகு அன்பான இதயமே.உள்ளம் அழகாக இருந்தால்தான் முகம் அழகாகும். இதனால்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கின்றனர் .இன்றைய நவீன உலகில் இளம் பெண்களும் இளைஞர்களும் முகத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் விளம்பரங்களைப் பார்த்து கண்டபடி கிரீம்களைப் பூசிக்கொள்கின்றனர். இது முகத்தில் மேலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. முகத் தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதுபோல் இன்று உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்பதில்லை. பாஸ்ட்புட் என்ற பெயரில் வரும் அரை வேக்காட்டு அரிசியைச் சாப்பிடுகின்றனர். மேலும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட உணவுகளையும் சாப்பிடுகின்றனர். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு குடலில் உள்ள வாயு சீற்றமாகின்றது. இதனால் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்கள் கரையாமல் அப்படியே இரத்தக் குழாய்களிலும் குடல் பகுதிகளிலும் படிந்துவிடுகின்றன. இதனால் உடல் சூடாகி முகத்தில் பருக்களாகவும், வெப்பக் கட்டிகளாகவும் தோன்றும்.மேலும் மலச்சிக்கல், மனச்சிக்கல் இருந்தால் முகத்தில் கருப்பு படரும்.இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியவரும். பல மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிவார்கள்.கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது.* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது.* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.* இரவு நேரங்களில் அதிகளவு கண்விழித்து கணிணியோ, தொலைக்காட்சியோ பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.* ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.* அதிக வேலைப்பளு, அதிக பட்டினி ஆகாது.* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.* உணவருந்தும்போது புத்தகம் படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கக்கூடாது.* தியானம், யோகா, செய்வது நல்லது.* மாதவிலக்குக் காலங்களில் முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன்ரோஜா இதழ் சந்தனத்தூள்காய்ந்த எலுமிச்சை தோல்செஞ்சந்தனம்இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு பெறும்.சிலருக்குக் கழுத்தில் செயின் போட்ட பகுதிகளில் கருத்து காணப்படும். மேலும் சிலருக்கு இறுக்கமான ஆடை அணிவதால் உடம்பில் சில பகுதிகளில் தோல் கறுத்து காணப்படும். அப்படி கறுத்த பகுதிகளில் இதனைப் பூசி வந்தால் கருமை நிறம் மாறும்.செம்பருத்திப் பூ இதழ்களை நன்கு மை போல் அரைத்து அதனுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற பூனைமுடிகள் உதிரும்.

நலம் தரும்... கடுகு


நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். கடந்த இதழ்களில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு, வெந்தயம் பற்றி அறிந்தோம். இந்த இதழில் கடுகின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.கடுகில் இரண்டு வகை உண்டு. 1) கருங்கடுகு, 2) வெண்கடுகு,இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.கடிப்பகை யெனவரு கடுகின் நாளு மிளகில் வணத்தோடு மூன்றுமொன்றாக்கியடுபுன லருந்துமு னயிலவை கறைதொறும்வளிமுதன் மூலிகை வலியெலா மகலும்பச்சடி முதற்கறி பண்பினா லயிலினுநிச்சய மாயுணி கழ்பிணி யறுக்குமே (தேரையர் குணபாடம்)செரிமானத்தைத் தூண்டசெரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.இருமல் நீங்கஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.வயிற்றுவலி குணமாகஅஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.நஞ்சு உண்டவர்களுக்குசிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்கடுகோட்டு மேன்மருந்த காண்.மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறுமுந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்தானே கடுகிற்குத் தான்(அகத்தியர் குணபாடம்)கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.சிறுநீர் பெருக்கிகடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.கடுகு எண்ணெய்கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.விக்கல் நீங்கவெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.இப்போது புரிகிறதா..! கடுகின் மகத்துவம் !!

வாழைப்பூ


நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து வருகிறோம். பூக்கள் நமக்கு மன அமைதியையும், நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன. இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்மன்னவளர்க் குந்தாது வை(அகத்தியர் குணபாடம்)வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.சர்க்கரை நோயாளிகளுக்குசர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.இரத்த மூலம்மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.உடல் சூடுஉடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.வயிற்றுக் கடுப்பு நீங்கசிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.பெண்களுக்குபெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.வெள்ளைப்படுதல் வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.கைகால் எரிச்சல் நீங்ககை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.இருமல் நீங்கவறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.தாது விருத்திக்குவாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.மலட்டுத்தன்மை நீங்கசிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி


உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது.உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது.உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.Tamil : KodumpuliSanskrit : VrikshamlaEnglish : Brindel berryTelugu : Sima chintaMalayalam : Kodumpuliஇதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.உடல் பருமன் குறையஉடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது.உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.பசியை அடக்கும்கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.மலச்சிக்கல் தீரபுளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.மூட்டுவலி நீங்ககொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும்.இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம்.

வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க...


ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி... என பட்டியல் நீளும்.கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே... இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.வரும்முன் காக்க·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

சித்தர் பூமி - சதுரகிரிமலை

சதுரகிரி மலை. சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை. சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர். சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.அமைவிடம் சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது. தெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும். ‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை. சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் பயணத்திற்கான முதல் படி இது. மிக எளிய பயிற்சி; நல்ல மன அமைதியையும் கொடுக்கும்.அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள். உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப் பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில் வைத்துக் கொள்ளலாம்.உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும் கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான, அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்.நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன வெளியில்..அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண் முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள் சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற கவலை வேண்டாம்.அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல் உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும். அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில் விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள். ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள் வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்! தங்குதடையின்றி ரசியுங்கள்!இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும் லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும். எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும் நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின் இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத் திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!

சித்தர் பூமி - சதுரகிரிமலை


தல புராணம்கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர். பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு. பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா. உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகி‎ன்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் த‎ன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவ‎ன். இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே எ‎‎‎ன்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று. சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, த‎ன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊ‎ன்றுகோலை எடுத்து சிவ‎ன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார். த‎ன்னை சிவனுட‎ன் இணைத்துக் கொண்டால் மட்டுமே த‎ன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் எ‎ன எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் த‎‎ன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார். பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது. அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியி‎ன் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளி‎ன் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம். தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார். மனமுருகிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார். சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார். இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார். அத‎ன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா த‎ன்னுடன் இணைந்த தேவியுட‎ன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார். பி‎ன்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பி‎ன் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு