செவ்வாய், 9 டிசம்பர், 2008
யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
அது ஒரு வனாந்திரக்காடு. கார்த்திகை மாதம். அடை மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடி கொடி என்று எல்லாமே ஈரமாகியிருந்தது.பெரிய மரம் ஒன்றில், கூட்டில் இருந்த தூக்கனாங் குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்காமல், சேர்த்து வைத்திருந்த உணவைத் தின்று விட்டுக் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்தது.மழை சற்று நின்றது. மழையால் ஏற்பட்ட இரைச்சலும் காணாமற்போனது.நமது குருவியின் போதாத நேரம், கூட்டைவிட்டுத் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.கூடு தொங்கிக் கொண்டிருந்த கிளைக்குக் கீழ் கிளையில் குரங்கு ஒன்று வெட வெடவென்று நடுங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையாலும், ஜில்'லென்ற சீதோஷ்ண நிலையாலும், முழுக்க ஆறு மணி நேரத்திற்கு மேல் அடை மழையில் நனைந்திருந்ததாலும் அந்த நடுக்கம்!இரக்கம் கொண்ட குருவி, அந்தக் குரங்கைப் பார்த்துச் சொன்னது."அண்ணா! நீங்கள் என்னை விட நூறு மடங்கு வலிமையானவர். திறமையானவர்.இப்படி நடுங்கும் நிலை ஏற்படலாமா? நீங்களும் என்னைப்போல ஒரு கூடைக்கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வளவுபாதுகாப்பாக இருக்கும்? நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?"குரங்கார் மேலே நிமிர்ந்து பார்த்தார். அவருக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது?"நீ எனக்கு எப்படி அறுவுரை சொல்லலாம்? என்னை என்ன முட்டாள் என்றுநினைத்தாயா? உனக்கு ஒரு கூடு இருப்பதால் தானே இந்தத் திமிர்ப் பேச்சு?இப்போது என்ன செய்கிறேன் பார்!" என்று மேல் கிளைக்குத்தாவி, தொங்கிக்கொண்டிருந்த கூட்டைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டிப் பிடிங்கித் தன்கைகளில் பற்றியது.அரண்டு போன குருவி கூட்டை விட்டுப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்தில்போய் அமர்ந்து கொண்டு, தன் கூட்டிற்கு எற்படும் நிலைமையைத் தன்கண்களால் பரிதாபமாகப் பார்த்தது.என்ன ஏற்பட்டிருக்கும்?குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூறுவார்களே அந்த நிலைதான் கூட்டிகும் ஏற்பட்டது.கூடு சுக்கல் நூறாகி மரத்தின் கீழ் பகுதிகளில் சென்று விழுந்தது.தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக