புதன், 10 டிசம்பர், 2008

அருணாச்சல மகிமை

உலகெல்லாம் படைத்து காத்து அருள் செய்து வரும் சிவபெருமானின் கட்டளையை செலுத்தி கைலாயத்தில் காத்து வருபவர் திருநந்தி தேவர். அந்த திருக்கைலாயத்தில் உள்ள மண்டபத்தில் பதஞ்சலி மார்க்கண்டேய போன்ற முனிவர்களும், ரிஷிகளும் திருநந்தி தேவரை சூழ்ந்து அமர்ந்திருக்க, மார்க்கண்டேய முனிவர் எழுந்து, பெருமானே! நாங்கள் முக்திப்பேறு அடைதற்குரிய வழியினைக்கூற வேண்டும் என்றார். அதற்கு திருநந்தி தேவர் காவேரி, கோதாவரி, கிருஷ்ணவேணி, பம்பை நதி, சரயு நதி, கங்கா நதி, தாமிரபரணி, யமுனா நதி, நர்மதை நதி என இன்னும் பல ஆறுகள் உள்ளன. இந்த நதிகளில் நீராடுவோர் பாவம் விலகும். அது மட்டுமல்ல காசி, திருவாரூர், சிதம்பரம், விருத்தாசலம், திருக்கேதாரம், காஞ்சி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, சீர்காழி, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், இரத்தினகிரி ஆகிய திருப்பதிகள் வேதங்களாலும் பாராட்டு பெற்றவை. மதுரை, இராமேஸ்வரம் ஆகிய பதிகள் பிறவி துயரை நீக்கவல்லது. யாரானாலும் அத்தகைய நகரங்களுக்குள்ளே பிறந்தாலும், உடலை விட்டு இறந்தாலும், போய் வணங்கினாலும், தூய்மையான நீரினால் முழுகினாலும், சிவபிரானுக்கு கோயில் கட்டினாலும் சிவப்பேற்றினை அடையலாம் என்றார். மார்க்கண்டேய முனிவர், அந்த நகரங்களில் மூழ்குவதும், அந் நகரங்களில் சென்று வழிபாடு செயவ்தும் எல்லோராலும் முடியாது அல்லவா? என எல்லோர்க்கும் எளிதான வழி ஒன்றை தாங்கள் கூறுதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்.
திருநந்திதேவர், நீங்கள் சொல்லியபடியே குருடர், முதியவர், விலங்கு, பறவை, புல், பூண்டு ஆகிய எல்லா உயிரினங்களும் எளிதில் சிவஞானம் அடைய கூடிய நகர் ஒன்றுண்டு. சிவஞானத்தை அளிக்க தக்க ஊர் ஒன்றிருக்கிறது. அதற்கு கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணாகிரி என பல பெயர் உண்டு என்றார். அண்ணாமலை இன்றைக்கு புதிதாக வந்ததன்று. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டானதாகும். அந்த நகரில் என்றும் அழியாத மலை உண்டு. அந்த மலையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கம் என கொண்டு, பாடிப்பரவி வழிபட்டனர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. அண்ணாமலை என்பதற்கு பொருள் அண்ண முடியாத மலை என்பதாகும். கிருத யுகத்தில் நெருப்பு மலையாக இருந்த காரணத்தால். அண்ணுதல் என்றால் நெருங்குதல். சூரியன் ஒரு அண்ண முடியாத நெருப்பு. அருணம் + அச்சலம் என்ற இரண்டு வார்த்தை. அருணம் என்றால் நெருப்பு. அச்சலம் என்றால் மலை பொருள். இதனை அக்னி பர்வதம் என்று கூட சொல்வார்கள். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலை அருணாச்சலமாக காட்சியளிக்கிறது. இதனை மலை என்ற கோணத்தில் பார்க்க கூடாது. இது ஒரு கல் மலை அல்ல. அதாவது சிவனுடைய வடிவம் என்று புரிந்துக்கொண்டு இந்த மலையை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலுக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம்தான் லிங்கம் என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மலையே சிவலிங்கம். தில்லையை தரிசிப்பவர்களுக்கும், காசியில் இறப்பவர்களும், திருவாரூரில் பிறப்பவர்களுக்கும் முக்தியுண்டாகும். நேரில் சென்று தில்லையை வணங்குவது எல்லோராலும் இயலாது. காசியில் இறப்பதும் எளிதன்று. திருவாரூரில் பிறப்பதும் நம்மால் ஆகக்கூடியதன்று ஆனால் அண்ணாமலையை எங்கிருந்தாலும் ஒரு முறை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அந்த ஊரில் உள்ள கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள். திருஅண்ணாமலை பேரூரினை சுற்றி 1008 லிங்கம் புதைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால், இன்றும் சிலர் காலில் காலணி அணியாதுதான்

கருத்துகள் இல்லை: