உலகின் முதல் நூல் என மேலை நாட்டு அறிஞர்கள் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டவை நமது வேதங்கள். வேதங்களில் வானியல், விஞ்ஞானம், மருத்துவம், சிற்பக்கலைகள், சங்கீதம், உலகம் உருவாகிய விதம், ஜோதிடம் என மனிதனின் அறிவிற்கு எட்டியவை, எட்டாதவை என அனைத்தும் அடங்கியுள்ளன.உலகில் வேறு எந்த நெறிமுறைகளும் தோன்றுவதற்கு முன்பாகவே வாழ்க்கை நெறிமுறைகளைக் காட்டி நமக்கு அருளியவை வேதங்களே!பிற்காலத்தில் ஏற்பட்ட பலவித நன்னெறிகளுக்கும், தர்மநெறிமுறைகளுக்கும் மூலகாரணமும் நமது வேதங்கள்தான். அத்தகைய சக்தியும் பெருமையும் கொண்ட நமது வேதங்கள் எவராலும் இயற்றப்பட்டவை அல்ல. அவை அளவற்றவை. அவற்றிற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ கிடையாது.வேதங்கள் அனைத்தும் ஒலி வடிவாய் வான மண்டலத்தில் எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றைச் சராசரி மனிதர்களால் கேட்பதற்கோ அல்லது முழுமையாக அறிந்துகொள்வதற்கோ இயலாது. அதற்கு அளவற்ற தவவலிமை வேண்டும். அத்தகைய தவவலிமை நம்மிடம் இல்லை. ஆனால், இத்தகைய வேதங்களின் சூட்சுமங்களையும் அவற்றில் அடங்கியுள்ள ரகசியங்களையும் தனது தவவலிமையினால் கண்டறிந்து, அவற்றை நாம் எளிதில் புரிந்துகொள்ளும்படி பரம கருணையுடன் ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் என நான்காக வகுத்து நமக்கு அளித்து அருள்புரிந்தவர் பராசர முனிவரின் புதல்வரான ஸ்ரீவேதவியாஸர். இவ்விதம் வேதங்களை வகுத்து, தொகுத்து அருளியவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டி அருளியவர்கள் நம் மகரிஷிகள். மருந்துகளை மருத்துவர் எழுதித் தருகிறார். ஆனால், அவற்றை எப்போது, எவ்விதம் உட்கொண்டால் நோய் தீரும் என்பதை நமக்கு எடுத்துக் கூறினால்தானே அம்மருந்துகளினால் நாம் பயன்பெறமுடியும்!அதேபோல்தான், வேத வியாஸர் சுலபமாக அறிந்துகொள்ளும்படி நமக்கு வகுத்தளித்த வேதங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளை அளித்தவர்களே நம் பக்திக்கும், நன்றிக்கும் உரிய மகரிஷிகள்.அத்தகைய மகரிஷிகளே கீழ்க்கண்ட மகாபுருஷர்கள் ஆவார்கள் :1. ஆஸ்வலாயணர், 2. போதாயனர், 3. ஆபஸ்தம்பர், 4. காத்யாயனர், 5. த்ராஹ்யாயனர் (காதிரர்), 6. கௌசிகர், 7. ஆண்டப்பிள்ளையார், 8. யாக்ஞவல்கியர்.வேதங்களின் பிரிவுகள்!ரிக்வேதத்தை 21 கிளைகளாகவும், யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், சாம வேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வண வேதத்தை 9 பிரிவுகளாகவும் பிரித்து அளித்தார் ஸ்ரீ வேதவியாசர். நாம் பிறந்தது முதல் குழந்தைகளாகவும், பின்பு இளைஞர்களாகவும், அதன்பின்பு நடுவயதினராகவும், பின்பு வயோதிகத்திலும், அதற்குப் பிறகு உலக வாழ்வை நீத்து மறுபிறவி அடைவது என்ற பிறப்பு, இறப்பு, மறுபிறவி என்ற சுழற்சியின் பல்வேறு கட்டங்களில் நாம் எவ்விதம் வேதங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்ற சூட்சுமத்தைத்தான் இம்முனிவர்கள் தங்கள் ஞானசக்தியாலும், ஆத்ம பலத்தினாலும் அறிந்து நமக்கு உபதேசித்துள்ளனர்.நாம் பிறந்தது முதல் வளர்ந்து வயோதிகம் என்ற நிலையைக் கடந்து இறந்த பின்பும்கூட, நம்மிடம் நெருங்கிய தொடர்பு கொண்டு நம்மை வழிநடத்தும் நமது பித்ருக்களைப் பற்றியும், அவர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளையும், அதனால் நாம் அடையும் புண்ணிய பலன்கள் பற்றிய ரகசியங்களையும் வேதங்கள் நமக்கு வெளிப்படுத்தியுள்ளன. ஆதலால் நமது முதல் ஆச்சார்யபுருஷர்கள் - அதாவது குரு - இம்மகரிஷிகளே!மகரிஷிகளின் சக்தி!தொன்மைவாய்ந்த நமது கலாசாரம், பண்பு, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறை ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவை இம்மகரிஷிகளின் உபதேசங்களே! ஏற்கெனவே நாம் குறிப்பிட்டபடி வேதங்களில் இல்லாதது என்று எதுவும் கிடையாது. கட்டடக்கலை, சிற்பக்கலை, மருத்துவம், மந்திரப் பிரயோகம். வானியலில் பல்வேறு கிரகங்களின் அசைவுகள், சூரியனின் சக்தி, பல்வேறு உலகங்கள் எப்போது, எவ்விதம் தோன்றின என்ற அனைத்தையும் நம் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆதலால் இல்லை என்று வேதங்களில் எதுவும் இல்லை என்று கூறலாம்.வேத மந்திரங்களின் சக்தியினால் நமது மகரிஷிகள் அளவற்ற சக்தியையும், திறமைகளையும் பெற்றார்கள். உதாரணமாக மகரிஷி விஸ்வாமித்திரரால் `திரிசங்கு' என்ற மன்னனுக்காக ஒரு புதிய உலகையே சிருஷ்டிக்க முடிந்தது. மாண்டவ்யர் என்ற மகரிஷி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் கோபமுற்று யமதர்மராஜரையே பணிய வைக்க முடிந்தது.இருப்பினும் மகத்தான சக்தி வாய்ந்த இந்த ஆச்சார்ய மகாபுருஷர்கள் வாழ்ந்ததோ குடிசைகள், காடுகள், மலைகள், குகைகள் ஆகியவற்றில்தான்.இன்றைய விஞ்ஞானம் எவற்றையெல்லாம் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறதோ அவை அனைத்தையும் நமது மகரிஷிகள் தங்களது ஞான பலத்தினால் மிகச் சரியாகக் கண்டறிந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வெளிப்படுத்தியுள்ளனர். வேதங்கள் அனைத்தும் விஞ்ஞானபூர்வமானவை என்பதை மேலைநாட்டு நிபுணர்களும் அவர்களிலும் முக்கியமாக ஜெர்மானிய அறிஞர்கள் வியப்புற்று விளக்கியுள்ளனர்.இத்தகைய வேதகால மகரிஷிகளின் திருவடி ஸ்பரிசம் பட்டதால்தான் நம் இந்தியா இன்றும் பாரத புண்ணிய பூமி என உலகினரால் போற்றப்பட்டு வருகிறது. இவ்வுலகம் `கர்மபூமி' - அதாவது மக்களின் செயல்களே அவர்களது பிறவிகளை நிர்ணயிக்கின்றன என்ற மகத்தான பிறவி ரகசியத்தை வேதங்களின் மூலமாக அறிந்து நமக்கு வெளிப்படுத்தியவர்கள் நாம் பூஜிப்பதற்குரிய இம்மகரிஷிகளே. இம்மகாபுருஷர்கள் தவம் புரிந்த கங்கை, இமயம், கயிலாயம், மானஸசரோவரம், புஷ்கரம், பிரம்ம சரோவரம், காசி, அமர்நாத், காடுகள், மலைகள் ஆகிய அனைத்தும் இன்றும் தெய்வத் தன்மையை எவ்விதம் பிரதிபலிக்கின்றன என்பதை நேரில் அனுபவிக்கும்போது தவச்சீலர்களான இம்மகரிஷிகளின் பெருமையும், தெய்வசக்தியும் நமக்குப் புலனாகிறது.இன்றைய நிலைமை!காலம் காலமாக வேத புண்ணியபூமியாக ஒளிவிட்டுப் பிரகாசித்த இப்பாரதப் புண்ணிய பூமி ஏராளமான அன்னியர்களின் படையெடுப்புகளினாலும், இந்நாட்டைச் சிறுசிறு ராஜ்ஜியங்களாக ஆண்டுவந்த அரசர்கள் அனைவரும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டதாலும் வேதங்களின் அருமையும், பெருமையும், அளவற்ற சக்தியும், அவற்றில் பொதிந்துள்ள அறிவு பொக்கிஷங்களும் பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டன. ஏராளமான பெரியோர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டு விட்டதால், வேதங்களை நமக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் மகான்கள் இல்லாமல் போய்விட்டனர். இன்று நம் குழந்தைகளுக்கு வேதகால மகரிஷிகளைப் பற்றிக் கூறுவார் எவருமில்லை. இதுபற்றி பூஜ்யஸ்ரீ சுவாமி ஸ்ரீதயானந்த சரஸ்வதி அவர்கள், பூஜ்யஸ்ரீ ஓம்காரனந்தா மற்றும் ஏராளமான ஆச்சார்ய மகாபுருஷர்களும் எங்கு வேத தர்மம் நம் குழந்தைகளுக்குத் தெரியாமலேயே போய்விடுமோ என்று கவலை கொண்டனர். பாரதம் வேத பூமி. வேதம் நிலைத்தால் மக்கள் நல்வாழ்வு பெறுவார்கள். ஆதலால் நமக்கு வேத நன்னெறியைக் காட்டி வாழ்விற்கு ஒளியேற்றிய ஆச்சார்ய மகாபுருஷர்களான மகரிஷிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்களைப் பூஜிக்க வேண்டும்; பாரத மக்கள் அனைவரும் வேதங்களைக் கற்க வேண்டும் என்ற அவாவினால் வேத தர்ம அறக்கட்டளை (Veda Dharma Trust)என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வேத தர்மத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆசாரம், அனுஷ்டானம், பக்தி ஆகியவற்றில் உயர்ந்த பெரியோர்களைக் கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த மகரிஷிகளின் எல்லையற்ற கருணையினால் நாம் நல்வாழ்வு பெற்று வாழ்கிறோமோ, அப்படிப்பட்ட மகரிஷிகளுக்கு நாம் என்னதான் கைம்மாறு செய்ய முடியும்?நமது மகரிஷிகளின் பெருமைகளை நாமும், நம் சந்ததியினரும் அறிந்து கொள்வதற்காகவும், மகரிஷிகளைப் பூஜிப்பதற்காகவும், தினமும் வேதபாராயணம், கோஸம்ரக்ஷணம், நித்ய அன்னதானம் போன்ற உன்னத கைங்கர்யங்களைச் செய்து வருவதற்காகவும் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் நம் மகரிஷிகளுக்கு அழகான ஆலயம் ஒன்று காவிரி அல்லது தாமிரபரணி புண்ணிய நதிக்கரையில் அமைப்பதற்காக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. வேதங்கள் நமக்கு உயிர் போன்றவை ஆகும். வேதங்கள் இல்லைமேல் நாமும் இல்லை! மிகப்பெரிய மகான்கள் பொறுப்பேற்றுள்ள இந்த அறக்கட்டளையை இன்று இந்து மதத்திற்காக ஈடிணையற்ற சேவை புரிந்துவரும் மகாத்மாவான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளும், பூஜ்யஸ்ரீ ஓம்காரனந்தா ஸ்வாமிகளும் சென்னையில் 30.11.2008 ஞாயிறன்று ஆரம்பித்து வைத்து, ஆசி அருளியுள்ளனர்.பாரத புண்ணிய பூமிக்குத் திலகம் போன்று அமையவிருக்கும் இந்த ஆலயம் அமைப்பதற்குப் பல 11/2 கோடி ரூபாய் ஆகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். இதற்குத் தேவைப்படும் இடம் சுமார் 10 ஏக்கர். இன்றும் சூட்சும உருவில் வேதங்களின் மூலம் நமக்குத் துணையிருந்து நல்வழிகாட்டி அருளும் இம்மகரிஷிகளுக்கு நன்றி காட்டும் இணையற்ற வாய்ப்பு இது. வசதியுள்ள இந்து சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்களால் இயன்ற - தங்கள் வசதிக்கு உட்பட்டு - காசோலையாகவோ, வரைவோலையாகவோ சமர்ப்பித்து மகரிஷிகளின் ஆசிகளைப் பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.தொடர்புகொள்ளவேண்டிய முகவரி :Veda Dharma Trust7, Old Mambalam Road,Chennai600 033.Phone : 9444005775, 9841012779.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் பல. அவற்றில் சிலவற்றை இப்போது கவனிப்போம். 1) இந்தியாவின் சென்றகால சரித்திரத்தை மக்களிடமிருந்து மறைத்தது காங்கிரஸ் அரசு. இதனால் ஏதோ சுதந்திரம் பெற்ற நாளிலிருந்துதான் இந்தியா என்றொரு தேசம் இருப்பதாக எதிர்கால சந்ததியினர் நினைக்கும் மனோபாவம் உருவாயிற்று.2) இந்தியாவைப் பிளவுபடுத்தி, அதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் பாகிஸ்தான் என்ற உண்மையை எதிர்கால சந்ததியினர் மறந்தே போய்விடும்படி காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய அரசாங்கமும் ஏதோ காலம் காலமாக பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்து வருவதுபோல் ஒரு கற்பனையான பிரமையை ஏற்படுத்தின.3) இந்தியாவை இரு நாடுகளாகப் பிளக்கும்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்த பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல், அவர்களை பாகிஸ்தானியர்களின் வெறிச்செயல்களுக்குப் பலியாக்கியது.4) அன்னிய மதத்தினருக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்து வளர்த்ததுடன், இந்துக்களை ஏதோ அன்னியர்கள் போல் கேவலப்படுத்தி, நடத்த ஆரம்பித்தனர் காங்கிரஸார். இவ்விதம் வேண்டுமென்றே அரசின் கொள்கைகளை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி, மற்ற மதத்தினர் வெளிநாடுகளிலுள்ள அவர்களது புனித தலங்களுக்குச் செல்வதற்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.5) காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவரும் ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது தலமாகிய ஜெருசலத்திற்குச் சென்றுவர தலா ஒருவருக்கு ரூ. 25,000 மானியம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியப் பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன. மற்ற மாநிலங்களைப் போலவே ஆந்திராவிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்துக்களாக இருந்து மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான். இவ்விதம் கிறிஸ்தவர்களுக்கு மானியம் அளிப்பதும் மதமாற்றத்தின் திட்டமிட்ட ஒரு செயலே ஆகும். இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வர் தனது தாய்மதமான இந்து மதத்தை விட்டுவிட்டு கிறிஸ்தவராக மாறியிருப்பதே ஆகும்.`மதச்சார்பற்ற அரசு' என்று பறைசாற்றிக்கொண்டு, இவ்விதம் குறிப்பிட்ட - அதுவும் பாரதத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களுக்கு மாறியவர்களுக்கு மட்டும் சலுகைகள் அளிப்பதும், அத்தகைய சலுகைகளை இந்துக்களுக்கு அளிக்க மறுப்பதும் எவ்விதம் நியாயமாகும்? `மதச்சார்பற்ற அரசு' என்று இவர்கள் ஏன் தங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டும்?இந்துக்கள் எப்போதுமே பெருந்தன்மையானவர்கள். இதற்கு இந்திய சரித்திரமே சான்றாகும். `பிற மதத்தினருக்கு ஏன் சலுகைகள் வழங்குகிறீர்கள்?' என்று இந்துக்கள் கேட்கவில்லை. பிற மதத்தினரைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதும் கிடையாது இந்துக்கள். ஆனால், `எங்களுக்கு மட்டும் ஏன் சலுகைகள் தருவதில்லை?' என்று கேட்க இந்துக்களுக்கு உரிமை உண்டு!தமிழக மக்களின் உயிர்நாடியான திருக்கயிலாயம் - மானஸசரோவரம் சென்றுவரும் ஆன்மிகப் பெருமக்களின் புனித யாத்திரைக்குச் சலுகைகள் கேட்டு இந்துக்களின் சார்பாக `தமிழக தெய்வீகப் பேரவை' என்ற அமைப்பு 25.12.2008 வியாழக்கிழமை அன்று சென்னை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது. மறுநாள் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சென்று சந்தித்து, விண்ணப்பம் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்துக்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நமது உரிமைகளை இனியும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. றீமேலும் விவரங்களுக்கு :தமிழக தெய்வீகப் பேரவை,2/176, பெரியண்ணன் வீதி,ஈரோடு-1. போன் : 9443380159 / 9443380154 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக