புதன், 10 டிசம்பர், 2008

திருவிளக்கின் அமைப்பு பற்றிய விளக்கம்

குத்துவிளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூப் போல் அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.தண்டுப் பாகம் தூண் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையைச் சடையுள் வைத்து சிவனைக் குறிக்கும். திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கலசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால் சதாசிவனை குறிப்பதாக உள்ளது. ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந்தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிப்பட்டு வந்தால் ’விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி’ என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

கருத்துகள் இல்லை: