செவ்வாய், 9 டிசம்பர், 2008
ஞானக் கதைகள்
கடவுள் எப்படியிருப்பார் என்று நச்சரித்த தன்னுடைய எட்டு வயதுக் குழந்தைக்குத் தாய் ஒருத்தி, ஒரு நாள் பெருங்கூட்டம ஒன்றிற்கு உரை நிகழ்த்த வந்திருந்தஸ்வாமி விவேகானந்தரைக் காட்டி - இவர்தான் கடவுள் என்று சொல்லி வைத்தாள்.அதுவும் நம்பிவிட்டது!அதோடு நில்லாமல் தன் குழந்தைக்குப் பயபக்தி உணர்வு மேலிட வேண்டுமென்பதற்காகத் தினமும் இருவேளைகள் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் இருந்த விவேகானந்தரின் படத்திற்குப் பூக்களை அர்ச்சித்துக் கும்பிடவும் வைப்பாள்தன் குழந்தை சாப்பிட, படுக்க என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் இதோபார்கடவுள் பார்த்துத்துக் கொண்டிருக்கிறார், அவர் கோபப் படுவாரா இல்லையா?உன்னால் அவர் நம் வீட்டைவிட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்று சொல்லிஅதை வழிக்குக் கொண்டு வருவாள்.குழந்தையும் நெறியோடு வளர்ந்தது. விவேகானந்தரின் தயவால் அன்னை சொல்லியவற்றையெல்லாம் கேட்டது - ஒன்றே ஒன்றைத் தவிர. அதாவது தினமும் ஏகப்பட்டமிட்டாய்கள், இனிப்புகள் தின்பதைத் தவிர!ஒருநாள் விவேகானந்தரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்த அந்தத்தாய், குழந்தையைத்தன் கணவரிடம் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஸ்வாமிஜீயைப் பார்த்து தன் குழந்தையைப்பற்றிச்சொல்லி அவனுக்கு நீங்கள்தான் கடவுள். ஆகவே நீங்கள் சொன்னால் நிச்சயம்கேட்பான். அவனுடைய பற்கள் கெடுவதற்கு முன்பு இந்த மிட்டாய்களை அதிகமாகத் தின்னும் பழக்கத்தை நிறுத்திவிட விரும்புகிறேன்.நீங்கள் உதவி செய்ய வேண்டும்என்று கேட்டுக் கொண்டாள்அவரும் சற்று யோசித்தவர், சரி அம்மா, உன் குழந்தையை அடுத்தவாரம் மீண்டும்அழைத்து வா, நான் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.அந்த இளம் தாய் விடவில்லை. அடுத்த வாரமே ஸ்வாமிஜீ குறிப்பிட்டிருந்த தினத்தில்மீண்டும் ஒரு முறை தன்னுடைய குழந்தையுடன் அவரைச் சென்று பார்த்தாள்தன்னை விழுந்து வணங்கிய சிறுவனை, வாஞ்சையோடு தன் கைகளில் துக்கிய அவர்புன்னகையோடு அவனை உற்று நோக்கியபிறகு, "கண்ணா, நீ அதிகமாக மிட்டாய்கள்தின்பாய் போலிருக்கிறதே - உன் பற்கள் சொல்கின்றனவே! இனிமேல் மிட்டாய்திங்கக்கூடாது சரியா?" என்று சொன்னார்.குழந்தையும் பய பக்தியுடன் "சரி" என்றது!சற்று நேரம் அவருடன் பேசிய அந்தத்தாய், தன்னுடைய மகனை வெளியே நின்றுகொண்டிருந்த தன் தாயாரிடம் விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் ஸ்வாமிஜி அவர்களிடம் வந்து, " ஸ்வாமிஜி, தாங்கள் சென்றமுறை நான் என் குழந்தையுடன்வந்திருந்தபோதே இதைச சொல்லியிருக்கலாமே! ஒருவாரம் கழித்து வரச் சொன்னதில்உள்ள தங்களுடைய அன்பான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.புன்னகைத்த விவேகானந்தர் சற்று மெல்லிய குரலில் சொன்னார்."தாயே சென்றவாரம் அந்தக் குழந்தைக்கு மிட்டாயைப் பற்றியும், இனிப்பைப்பற்றியும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லாமல் இருந்தது.ஏனென்றால் நானும்அவற்றை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் சொல்லவில்லை. இந்த ஒருவாரத்தில் அதை நானும் நிறுத்தி விட்டேன். இனிமேல் நானும் அவற்றைச் சாப்பிடப்போவதில்லை. இப்போதுதான் எனக்கு அதற்குரிய தகுதி வந்திருக்கிறது. புரிந்துகொண்டாயா அம்மா?அந்தத் தாய் அசந்து விட்டாள்.இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், போதிப்பதற்கும் உள்ள வழி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக