செவ்வாய், 16 டிசம்பர், 2008
அஜீரணத்தை போக்கும் இஞ்சி
இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம். இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக