செவ்வாய், 16 டிசம்பர், 2008
நீரழிவை குணமாக்கும் நாவற்பழம்
பழ வகைகளில் மிக அதிகமான மருத்துவக் குணம் கொண்டது நாவற்பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி', 'பி' ஆகிய தாது உப்புகள், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள், மாவுச்சத்து ஆகியவை உள்ளன. இதன்மூலம் நாவற்பழம் நீரழிவை குணமாக்கும் அருமருந்தாகவும் திகழ்கிறது.நாவல் பழத்தின் விதைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 3 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து குடிக்கவும். தினந்தோறும் 3 அல்லது 4 முறை இதுபோன்று குடித்து வந்தால் நீரழிவு நோய் படிப்படியாக குறையும். நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்து, அதன் சாம்பலை தினமும் காலை வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு பின்னரும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும். கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் சீராக இயங்க நாவல் பழம் சாப்பிடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக