செவ்வாய், 9 டிசம்பர், 2008
தங்கத் திருவோடு தந்த மனமாற்றம்!
துறவி ஒருவர் இருந்தார். முற்றும் துறந்தவர். நகருக்கு ஒதுக்குப்புரத்தில்ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவில் தென்னங்கீற்றுக்களால் வேயப்பெற்றஒரு பெரிய கூரைக் கொட்டகை. அதுதான் அவருடைய வசிப்பிடம்.இரண்டு ஜோடி வேட்டி துண்டுகள். ஒரு திருவோடு. இவைதான் அவருடையசொத்து.காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து தோட்டத்தின் முன்புறத்தில் உள்ள அரசமரத்தடியில் வந்துஅமர்ந்து விடுவார். பிறகு ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபடுவார்.அந்தப் பகுதி மக்கள் அவருக்கு அவ்வப்போது உணவைக் கொண்டு வந்துகொடுத்து விடுவார்கள். திருவோட்டில் வாங்கி வைத்துக் கொள்வார். பசிக்கும்போது மட்டும் சாப்பிடுவார்.தினந்தோறும் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் வந்து காத்திருக்கும்பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளுக்குத்தீர்வு சொல்லுவார் அல்லது ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லுவார்.அவருக்கு உயிர்களிடத்தில் அலாதியான அன்பு. நாளடைவில் அவர் மிகவும்பிரபலமாகி மக்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியது. அவரைப் பற்றியசெய்தி அந்நாட்டு மன்னனின் காதில் விழ, மன்னனே ஒரு நாள் அங்கு வந்துஅவரைப் பார்த்துவிட்டுப் போனான்.நாட்டின் பிரச்சினைகள் சிலவற்றை மன்னன் அவரிடம் சொல்ல, அவர்அவற்றிற்கும் தீர்வு சொன்னார். மன்னன் மனம் மகிழ்ந்து விட்டான்.இரண்டு நாட்கள் கழித்து, மன்னன் தன் பல்லக்கை அங்கே அனுப்பி அவரைஅரண்மணைக்கு அழைத்துவரச் செய்து உபசரித்தான். அவருடனேயேஅரண்மணையில் தங்கிவிடும்படி கேட்டுக் கொண்டான். துறவி மறுத்துவிட்டார்.அவர் மறுத்து விடுவார் என்று ஊகம் செய்து வைத்திருந்த மன்னன், அவர்விருப்பப்படி அவரைத் திரும்பிப் போகச்சொன்னதோடு, அவருக்குப் பரிசாகஇரண்டு கிலோ அளவு தங்கத்தில் செய்த திருவோடு ஒன்றையும் கொடுத்தனுப்பினான்.தங்கத் திருவோட்டைப் புன்னகையுடன் முதலில் பெற்றுக்கொள்ள மறுத்ததுறவியார், மன்னைன் வற்புறுத்தலுக்காகக் கையில் எடுத்துக் கொண்டு,தன் குடிலுக்குத் திரும்பினார்.+++++++++++++++++++++++++++++++++++++++++++++அன்று இரவு, நடு நிசி. துறவியார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மன்னன்கொடுத்த தங்கத் திருவோடு வசதியாக இருந்ததால், அதைக் குப்புறக் கவிழ்த்து,அதன் மேல் தலைவைத்துப் படுத்திருந்தார்.சுற்றுப்புறச்சுவர்களில் தப்பைகளால் அடிக்கப்பட்டிருந்த மூங்கில் ஜன்னல் வழியாகநிலவொளி வெளிச்சம் கீற்றாக உள்ளே விழுந்து கொண்டிருந்தது.மன்னர் துறவிக்குத் தங்கத்திருவோட்டைப் பரிசாகக் கொடுத்ததைப் பார்த்தசிப்பந்தி ஒருவன் அதைத் திருடிக்கொண்டுபோய்விடும் நோக்கத்துடன், அன்றுஇரவு துறவியின் குடிலுக்குள் நுழைந்து, இருட்டில் அதைத் தேட ஆரம்பித்தான்.ஒரு ஆளின் நடமாட்டம் குடிலுக்குள் இருப்பதை அறிந்த துறவி, விழித்துக்கொண்டு விட்டார்."யாரப்பா அது?" என்று வினவினார்.வந்தவன் பேசாமல் நின்றான்.துறவி மீண்டும் கேட்டார்,"என்ன தங்கத் திருவோட்டைத் தேடுகிறாயா?"அவன் மெல்லிய குரலில், "ஆமாம்!" என்றான்."இந்தா எடுத்துக்கொள்" என்று சொல்லித் தன் தலைக்கு அணைவாக வைத்துபடுத்திருந்த திருவோட்டைத் தூக்கி அவன் கையில் கொடுத்த துறவியார்,அடுத்த நொடியில் மீண்டும் படுத்துக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்து விட்டார்திகைத்துப்போன திருடன், சற்று நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான்அதோடு, துறவியார் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாரோ என்றுபயந்தான். மேலும் ஒரு நாழிகை அளவு குடிசைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்துவிட்டு, துறவியார் உண்மையிலேயே நித்திரையில் ஆழந்துவிட்டார், கூச்சலிட்டுயாரையும் வரவழைக்கமாட்டார் என்று தெரிந்தவுடன், நடையைக் கட்டினான்.++++++++++++++++++++++++++++++++++அடுத்த நாள் மாலை, துறவியாரின் குடிலுக்கு வந்த சிப்பாய், தங்கத் திருவோட்டைத்திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழுந்து கதறி அழுதவன், சொன்னான்."சாமி, இந்தத் திருவோட்டைத்தூக்கிக் கொண்டு போனதில் இருந்து என் நிம்மதியும்போய்விட்டது. தூக்கமும் போய்விட்டது. அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்இதை என்னிடம் எடுத்துக் கொடுத்த மறு நொடியிலேயே நீங்கள் மீண்டும்நித்திரையில் ஆழ்ந்துவிட்டீர்கள். எதன் மீதும் பற்றற்ற உங்கள் மனம்தான்அதற்குக் காரணம். நான் ஆசா பாசங்களை ஒழிப்பது என்று முடிவிற்கு வந்துவிட்டேன். உங்கள் திருவோடு இதோ இருக்கிறது. என்னை மன்னித்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னையும் உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். பற்று அற்றநிலையை எப்படி அடைவது என்ற பாடத்தை எனக்குப் போதித்து அருளுங்கள்!"(முற்றும்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக